Search This Blog

Saturday, July 30, 2011

எழுத்தாளன்

ஒரு நண்பணின் மூலமாக இந்த லிங்க் கிடைத்தது.

http://www.vinavu.com/2011/06/24/charu/

இந்த எழுத்தாளரைக் குறித்து இந்த விஷயத்தில் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் நான் பல முறை இவருக்கு இவ்வளவு விசிறிகளா என்று வியந்ததுண்டு. காரணம் அவரின் ப்ளாகில் எந்தவித பாரபட்சமுமின்றி எல்லாரையும் சராமாரியாக எடுத்தெறிந்து பேசியிருப்பார். ஆனால் அந்த விசிறிகள் அவரின் நன்மதிப்பை பெற அதிகமாக துடிப்பார்கள்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கைப் படித்த பொழுது ஒரு வகையில் இது நடந்ததற்கு இருவருமே காரணம் ஒருவரை மட்டும் குற்றம் சொல்லுதல் சரியா? தெரியவில்லை. ஒருவரை பாதிக்கப்பட்டவராகவும் மற்றவரை வக்கிரமானவராகவும் காட்டுவது சரியா?

எல்லாருக்குள்ளும் வக்கிரம் உள்ளது சிலர் வெளிப்படுத்துகிறார்கள், மாட்டிக்கொள்ளுகிறார்கள். சிலர் வெளிப்படுத்தியும் தப்பிக்கிறார்கள். சிலர் வெளிப்படுத்துவதேயில்லை.

No comments:

Life is a struggle

Beyond an age life is a struggle.  One of the most difficult things in life to watch your parents getting sick and weak. The ones who taught...