குசேலன் பாடல்களை கேட்டேன். மொத்தம் ௫ பாடல்கள் அதில் பளிச்சென்று பிடித்தது ஓம் சாரரே என்று தலேர் மெஹந்தி முதல் முறையாக தமிழில் பாடியிருக்கும் பாடல் தான். போட்டு பின்னி எடுத்து இருக்கிறார் ஜி வி பிரகாஷ்.
அடுத்ததாக பேரின்ப பேச்சுக்காரன் என்று வரும் பாடல் மிக அருமை. கிராமத்து மணம்கமழும் பாடல் அது.
அடுத்ததாக சி டி யில் முதல் பாடலாக வரும் சினிமா சினிமா என்ற பாடல். ஆரம்பம் The Omen படத்தில் BGM போல ஆரம்பிக்கிறது பிறகு ஒரு வித்தியாசமான மெட்டில் செல்கிறது.
அடுத்ததாக சாரல் என்று வரும் பாடல். அதுவும் இளமை துள்ளலூடு இருக்கிறது. கொஞ்சும் மைனாக்களே என்று வந்த ரஹ்மான் பாடலை சிறிது நினைவு படுத்துகிறது.
இன்னும் மனதில் ஒட்டாமல் இருக்கும் பாடல் சொல்லாமலே என்று வரும் பாடல். இதன் மெட்டு இன்னும் நன்றாக மனதில் பதியவில்லை.
மொத்தத்தில் இந்த சி டி யின் பெஸ்ட் பிக் ஓம் சாரரே .
3 comments:
yow u have ears or some other idiot stuff?
nalla iruka? karumam..
ketka sahikalla..
ithellam songsa? rajiniye ketta vomit pannuvar..
welcome sir. please teach G V prakash some muzeek becos looks like u know better.
I am missing it boss :-(
anyway good that the songs are good.Be it good or bad, Rajni will make it a hit.
Post a Comment