இரயில் பயணம் - 1 இங்கே படிக்கவும்.
கந்தனுக்கு அடுத்தவர்களை குறித்து சிறிதும் கவலைப்படாமல், அன்ரிசர்வ்ட் டிக்கெட் வைத்துக்கொண்டு ரிசர்வ்ட் கோச்சில் பயணம் செய்யும் அந்த கூட்டத்தின் மீது கடும் கோபம் ஏற்ப்பட்டது.
செங்கல்பட்டு வந்தது. அந்த கூட்டத்தில் இருந்த சிலர் கீழே இறங்கி சன்னல் வழியாக உள்ளே இருப்பவர்களோடு சத்தம் போட்டு பேசி சிரிக்க ஆரம்பித்தனர். வண்டி கிளம்பியது. எல்லோரும் ஓடி வந்து ஏறினாகள். இது வரை வசதியாக உட்கார்ந்த ரிசர்வ்ட் டிக்கெட் வைத்திருந்தவரை ஒரம் தள்ளி மறுபடியும் கச்சேரியை ஆரம்பித்தது கூட்டம்.
கந்தன் எழுந்தான்.
"ஸார் நீங்கள் வைத்திருப்பது அன்ரிசர்வ்ட் டிக்கெட் அதை வைத்துக்கொண்டு இதில் பயணம் செய்வது தவறு, மேலும் ஒரு சரியான டிக்கெட் வைத்திருப்பவரையும் நீங்கள் சங்கடப்படுத்துகிறீர்கள்" என்றான்
அந்த அப்பாவி மனிதர் "பரவால்லே ஸார் விடுங்க" என்றார்
"அதான் அவரே சொல்றார் இல்லே போய் உன் வேலையை பார்" என்றான் அந்த கூட்டத்திலேயே சிறியவன்.
அந்த கூட்டத்தில் இருந்த பெண் அவனை பெருமையோடு பார்ததாள்.
"நான் டிக்கெட் பரிசோதகரை கூப்பிடுகிறேன்" என்று நகர்ந்தான் கந்தன்
"யோவ் அதான் சொல்றாங்க இல்லே போய் உக்கார்யா. வந்துட்டான் பெரிசா" என்றான் கூட்டத்தில் இன்னொருவன்.
"தம்பி நீங்க எல்லாம் தவறு செய்றீங்க அது உங்களுக்கு புரியுதா" என்றான் கந்தன்.
"தோடா வந்துட்டார் சதர்ன் இரயில்வே ஓனர் போய் ஒர்மாய் உட்கார்"
சுற்றியிருந்த மக்கள் பதட்டமாயினர். கந்தன் மீது எரிச்சலுற்றனர். "துஷ்டனை கண்டால் தூர விலகாமல் என்ன இவன் பிரச்சனை பண்ணிக்கொண்டு இருக்கிறான். அடிபட்டு சாக போகிறான்" என்று நினைத்தனர்.
கந்தன் அவர்களிடம் "நான் இப்பொ பத்து வரை எண்ணுவேண் அதற்குள் நீங்கள் இது வரை செய்த தவறுகளை ஒன்று ஒன்றாக சொல்லவேண்டும். ஓன்று" என்றான் கந்தன்.
"அடிங்....... பெரிய ...... இவர். பாபா கவுண்ட்டிங் தறார். போடா" மூவர் சீட்டை விட்டு எழுந்து தலை முடியை சிலுப்பிக் கொண்டனர்.
அவன் பேசி முடிக்கவும் கந்தன் பத்து எண்ணி முடிக்கவும் சரியாக இருந்தது.
"சொல்லிட்டே இருக்கேன் எண்ணிட்டே இருக்கே" என்று ஒருவன் கை ஓங்கினான்
சுளீர் என்று விழுந்தது அவன் கழுத்தில் ஒரு அடி. துடித்துப் போனான் அவன். கையால் கழுத்தை பிடித்துக்கொண்டான்.
கந்தன் கையில் ஒரு நீள மூங்கில். எப்பொழுது, எங்கிருந்து வந்தது என்று அவர்களுக்கு தெரியவில்லை.
"முதல் தவறு அடுத்தவங்களை மதித்து பேசு" அடுத்த சுளீர் அருகே இருந்த இன்னொருவனுக்கு.
"ஹம்மா" என்று கையை பிடித்துக்கொண்டான் அவன்.
இன்னொருவன் மூங்கிலை பிடித்து ஒடிக்க வந்தான் கந்தனின் கால் அவன் வயிற்றில் இறங்கியது. தொபீர் என்று அனைவர் மீதும் விழுந்தான் அவன்.
தொடரும் ....
Search This Blog
Subscribe to:
Post Comments (Atom)
Coolie - My View
I go to every Rajini movie expecting something which we became a fan of in 80's and 90's. But I only end up saying may be in the nex...
-
நான் பொருட்காட்சிக்கு சென்று 15 வருடங்களாவது இருக்கும். பொருட்காட்சியை பற்றி மனதில் பசுமையான நினைவுகளே உள்ளன. குறிப்பாக இந்தியன் இரயில்வே ஸ்...
-
Just returned from watching Venkat Prabhu's Goa. Before going to the movie, went through all the negative reviews. Some of the negatives...
-
The title of this blog is a famous title of Rajesh Kumar's tamil novel. Those who are familiar with tamil novels must have heard of Raje...
5 comments:
Nanba.. please get to part 3 soon.... ennoda thala vedichudum illana! :) Nice story.. you have got my full attention...
Dan,
Ungaluku ullaiyum oru anniyan mathiri yennakullai irundha anniyan onnum panna mudiyamal verupadaiju veli nattukku vandhuthaan.
Gopi,
Thanks Nanba.
Balaji,
Oru naal illae oru naal anniyan veliye vara than poran
waiting for the next part.
pls do post the next episode..waiting eagerly
Post a Comment