இரயில் பயணம் - 2 இங்கே படிக்கவும்.
அடுத்தது கந்தனின் பார்வை அந்த பெண்ணிண் மீது விழுந்தது. பெண்கள் ஆண்களை விட பெண்கள் சிறிது சட்டத்தை மதிப்பவர்கள் என்ற எண்ணம் கந்தனுக்கு உண்டு. அவள் குழந்தைகளை இறுக்க பிடித்துக் கொண்டு நடக்கும் காரியங்களை வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தாள். அந்த கூட்டத்தில் ஒருவன் அவளது கணவனாக இருக்க வேண்டும் என்று கந்தன் உணர்ந்தான். இது வரை அவளது கணவணோ அல்லது அவனுடைய நண்பர்களோ அடி கொடுத்து தான் பார்த்திருப்பாள் முதல் முறையாக அவர்கள் அடி வாங்குவதை பார்த்த உடன் அவளுக்குள் முதல் முறையாக பயம் எட்டிப்பார்த்தது.
அவளை பார்த்து "உன் கணவண் யார்?" என்றான்.
அந்த குழந்தைகள் மலங்க மலங்க விழித்தது. இதே குழந்தைகழை வேறு இடத்தில் பார்த்திருந்தால் ஒரு வேளை ரசித்திருப்பான் கந்தன் இந்த சூழ்நிலையில் அவர்கள் மேலும் அவன் கோபம் பொங்கியது.
அவள் பயந்து கொண்டே ஒருவனை நோக்கி கை நீட்டினாள்.
"நீங்களாவது இவர்களுக்கு புத்தி சொல்ல கூடாதா. அன்ரிசர்வ்ட் டிக்கெட் இருந்தால் அன்ரிசர்வ்டடில் தானே செல்ல வேண்டும். அது என்ன ஒரு ஒரு ஸ்டேஷனிலும் இறங்குவது, பிறகு இரயில் கிளம்பிய உடன் ஓடி வந்து ஏறுவது. அதை கண்டிப்பதை விட்டு விட்டு ரசித்து கொண்டு இருக்கீங்க நீங்க. நீங்கள் கண்டிக்காததால் உங்கள் கணவர் பாவம் அதன் பலனை அநுபவிக்க போகிறார்" என்று பேசி முடிக்கும் முன்பு மூங்கிலை அந்த கணவணின் முதுகில் இறக்கினான்.
"ஹக் ஹம்மா" என்று அவன் முதுகை தடவும் முன்பாக அடுத்த அடி சாட்டையை போல அவன் தோளில் இறங்கியது.
அடுத்து கையில் பொறி பொட்டலத்தோடு நின்றவனை பார்த்தான். தரை முழுதும் பொறி சிந்தியிருந்தது. போதாக்குறைக்கு ஆரஞ்சு பழ தோல் வேறு.
அவனின் தலை முடியை கொத்தாக பிடித்தான் தரயை நோக்கி குனிய வைத்தான் கந்தன்.
"கீழே என்ன திரியுது" என்றான்
"அது.."
பளார் என்று விழுந்தது அறை அவன் எதிர்ப்பார்க்காத தருனத்தில்.
"இந்த கோச் முழுவதையும் ஒரு குப்பை இல்லாமல் சுத்தம் செய். சுத்தம் சோறு போடும்" என்று தள்ளி விட்டான்.
அவன் முனகிக்கொண்டே உதவாத நண்பர்களை பார்த்துக்கொண்டே சுத்தம் செய்ய ஆரம்பித்தான்.
டிடிஆர் வேகமாக கந்தனை நோக்கி வர ஆரம்பித்தார்.
தொடரும்..
Search This Blog
Subscribe to:
Post Comments (Atom)
Ikiru
Just finished watching this movie and what a profound movie. This is my first Akira Kurosawa movie and I was simply blown away by the movie....
![](https://i.ytimg.com/vi/2F9E8q_3KZ8/hqdefault.jpg)
-
The title of this blog is a famous title of Rajesh Kumar's tamil novel. Those who are familiar with tamil novels must have heard of Raje...
-
நான் பொருட்காட்சிக்கு சென்று 15 வருடங்களாவது இருக்கும். பொருட்காட்சியை பற்றி மனதில் பசுமையான நினைவுகளே உள்ளன. குறிப்பாக இந்தியன் இரயில்வே ஸ்...
-
Sometimes our life seems to be like the Truman show. We see the same thing daily. We live the same routine day by day. For me when I start w...
3 comments:
very interesting... very brisk narrative. ada ada ada asathuthu un style..
nandri cowey ayya
hey TTR should come only after he shouts TTR! :)
Appuram enna achu?
Post a Comment